என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளிக்கு 18 டன் இனிப்பு விற்பனை செய்ய ஆவின் இலக்கு
Byமாலை மலர்6 Oct 2021 6:46 AM GMT (Updated: 6 Oct 2021 8:38 AM GMT)
அனைத்து மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளதால், சிறப்பு வகை இனிப்புகளின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக ஆவின் உயர் அதிகாரி கூறினார்.
சென்னை:
தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பால் பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படுவது வழக்கம். ஆவின் நெய், வெண்ணெய், மற்றும் இனிப்பு வகைகள் பெரும்பாலும் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு குறைவான அளவே இனிப்புகள் தயாரிக்கப்பட்டது. நெய் 200 டன் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தொற்று கட்டுக்குள் இருப்பதால், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் இனிப்பு வகைகளை அதிக அளவு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. காஜு கட்லி, காஜு பர்பி, ட்ரை புரூட்ஸ் சுவீட்ஸ் உள்ளிட்ட 5 ஸ்பெஷல் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகிறது.
300 டன் நெய் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 வகை சிறப்பு இனிப்புகள் அரை கிலோ பாக்கெட்டுகளிலும், மைசூர் பாகு, ரசகுல்லா, பால்கோவா போன்ற இனிப்புகள் 250 கிராம் அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளதால், சிறப்பு வகை இனிப்புகளின் விலை உயர வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் விலை நிர்ணயம் செய்யப்படும்.
பொதுமக்கள் ஆன்லைன் வழியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தீபாவளி இனிப்புகளுக்கு முன்பதிவு செய்யலாம். மாதவரம், அம்பத்தூர், சோளிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தனித்தனி தொடர்பு எண்கள் வழங்கப்பட உள்ளது.
அந்த எண்களில் தொடர்புகொண்டு தீபாவளி இனிப்பு மற்றும் பால் பொருட்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆவின் இனிப்புகளை பார்லர்கள் மட்டுமின்றி வணிக வளாகங்களில் விற்கவும் ஆலோசிக்கப்படுகின்றது.
தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பால் பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படுவது வழக்கம். ஆவின் நெய், வெண்ணெய், மற்றும் இனிப்பு வகைகள் பெரும்பாலும் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு குறைவான அளவே இனிப்புகள் தயாரிக்கப்பட்டது. நெய் 200 டன் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தொற்று கட்டுக்குள் இருப்பதால், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் இனிப்பு வகைகளை அதிக அளவு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. காஜு கட்லி, காஜு பர்பி, ட்ரை புரூட்ஸ் சுவீட்ஸ் உள்ளிட்ட 5 ஸ்பெஷல் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகிறது.
15 டன் முதல் 18 டன் வரை இனிப்புகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பால் கொள்முதல் மற்றும் உற்பத்திக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
300 டன் நெய் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 வகை சிறப்பு இனிப்புகள் அரை கிலோ பாக்கெட்டுகளிலும், மைசூர் பாகு, ரசகுல்லா, பால்கோவா போன்ற இனிப்புகள் 250 கிராம் அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளதால், சிறப்பு வகை இனிப்புகளின் விலை உயர வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் விலை நிர்ணயம் செய்யப்படும்.
பொதுமக்கள் ஆன்லைன் வழியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தீபாவளி இனிப்புகளுக்கு முன்பதிவு செய்யலாம். மாதவரம், அம்பத்தூர், சோளிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தனித்தனி தொடர்பு எண்கள் வழங்கப்பட உள்ளது.
அந்த எண்களில் தொடர்புகொண்டு தீபாவளி இனிப்பு மற்றும் பால் பொருட்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆவின் இனிப்புகளை பார்லர்கள் மட்டுமின்றி வணிக வளாகங்களில் விற்கவும் ஆலோசிக்கப்படுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?- அமைச்சர் சேகர்பாபு தகவல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X