என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
9ந்தேதி 2-வது கட்ட தேர்தல்: சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
Byமாலை மலர்6 Oct 2021 6:43 AM GMT (Updated: 6 Oct 2021 9:37 AM GMT)
வருகிற 9-ந் தேதி நடைபெறும் 2-வது கட்ட தேர்தலுக்கும் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் 250 பஸ்கள் அதிகாலை 2.30 மணிவரை இயக்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செஞ்சி, திருக்கோவிலூர், ஆரணி, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதையடுத்து வருகிற 9-ந் தேதி நடைபெறும் 2-வது கட்ட தேர்தலுக்கும் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இதை தொடர்ந்து வருகிற 9-ந் தேதி நடைபெறும் தேர்தலை முன்னிட்டு 8-ந் தேதி மாலை முதல் 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்களும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் இருந்து 200 பஸ்களும் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதை கருத்தில் கொண்டு கூடுதலாக பஸ்களை இயக்க தயாராகி வருகிறோம்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் 250 பஸ்கள் அதிகாலை 2.30 மணிவரை இயக்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செஞ்சி, திருக்கோவிலூர், ஆரணி, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதையடுத்து வருகிற 9-ந் தேதி நடைபெறும் 2-வது கட்ட தேர்தலுக்கும் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க வசதியாக கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 250 பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 2.30 மணிவரை மக்கள் அதிகளவு வந்ததால் அவர்களுக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து வருகிற 9-ந் தேதி நடைபெறும் தேர்தலை முன்னிட்டு 8-ந் தேதி மாலை முதல் 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்களும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் இருந்து 200 பஸ்களும் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதை கருத்தில் கொண்டு கூடுதலாக பஸ்களை இயக்க தயாராகி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... எனது கடைசி போட்டி சென்னையில் தான் நடக்கும்- டோனி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X