search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கருமத்தம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருட முயன்ற வாலிபர் கைது

    கருமத்தம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டி அருகே உள்ள பவர்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 19). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருட முயற்சி செய்துள்ளார். மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு தினேஷ்குமார் வெளியே வந்தார்.

    மோட்டார் சைக்கிளை திருடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த கிருபய்ராஜ் (24) என்பதும், சோமனூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் வசித்து வருவதும், தெரியவந்தது.

    இதனையடுத்து தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை திருட முயற்சித்த கிருபய்ராஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் ந்து பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெறுவதும், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடுவது போன்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொது மக்களிடையே அதிர்ச்சி யையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×