என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேமலாபாத் அருகே 8 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்5 Oct 2021 10:44 AM GMT (Updated: 5 Oct 2021 10:44 AM GMT)
கேமலாபாத் அருகே 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் ஆழ்வார் திருநகரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்பேரில் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி பிரபா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் மற்றும் போலீசார் நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கேமலாபாத் அருகே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அந்த காரில் மாரிமுத்து, சங்கரசுப்பு, பாலமுருகன், நம்பிகணேஷ், ராமசாமி ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த கார் டிக்கியில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் காரில் வந்த சங்கரசுப்பு, நம்பிகணேஷ், ராமசாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.40,000 பணம் மற்றும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
காரில் வந்த மாரிமுத்து, பாலமுருகன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். மேலும் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் ஆழ்வார் திருநகரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்பேரில் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி பிரபா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் மற்றும் போலீசார் நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கேமலாபாத் அருகே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அந்த காரில் மாரிமுத்து, சங்கரசுப்பு, பாலமுருகன், நம்பிகணேஷ், ராமசாமி ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த கார் டிக்கியில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் காரில் வந்த சங்கரசுப்பு, நம்பிகணேஷ், ராமசாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.40,000 பணம் மற்றும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
காரில் வந்த மாரிமுத்து, பாலமுருகன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். மேலும் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X