என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரஸ்வதி பூஜை முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் - திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி
Byமாலை மலர்5 Oct 2021 10:11 AM GMT (Updated: 5 Oct 2021 10:11 AM GMT)
தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு உள்ளிட்ட படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் பழைய உற்சாகம் திரும்பும்.
திருப்பூர்:
கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் கடந்த 2 வாரங்களாக திரையரங்குகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டதுடன் வசூலும் குறைவாக இருந்தது. இதனால் ஓ.டி.டி. தளங்களில் தான் இனி எதிர்காலம் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது புதிய படங்கள் வெளியான நிலையில் மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில்,
இந்த வாரம் புதிதாக திரைக்கு வந்துள்ள சிவகுமாரின் சபதம், ருத்ர தாண்டவம் மற்றும் ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் நோ டைம் டூ டை என்ற 3 படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் நல்ல படங்களை திரையரங்கில் பார்க்க விரும்புகின்றனர்.
மேலும் தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு உள்ளிட்ட படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் பழைய உற்சாகம் திரும்பும். தமிழக அரசு சரஸ்வதி பூஜை முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X