search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

    குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள பங்களாபுதூர் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த லாரி ஒன்று மணிகண்டன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்து குறித்து மணிகண்டனின் மனைவி தமிழரசி (30) கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×