என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ்திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிற்றுண்டி
Byமாலை மலர்5 Oct 2021 2:15 AM GMT (Updated: 5 Oct 2021 2:15 AM GMT)
இந்த அன்னதான திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 பக்தர்கள் பசியாறுகின்றனர். இதனை தொடர்ந்து மற்ற கோவில்களிலும் ஒரிரு நாட்களில் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.
சென்னை :
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 16-ந்தேதியன்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய மூன்று கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தினால் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த அன்னதானம் வழங்கும் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி இன்று (நேற்று) முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் காலை 8 மணி முதல் 10.30 வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.
மற்ற வேளையில் உணவு வழங்கப்படும். இந்த அன்னதான திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 பக்தர்கள் பசியாறுகின்றனர். இதனை தொடர்ந்து மற்ற கோவில்களிலும் ஒரிரு நாட்களில் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.
மேற்கண்ட தகவல் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 16-ந்தேதியன்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய மூன்று கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தினால் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த அன்னதானம் வழங்கும் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி இன்று (நேற்று) முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் காலை 8 மணி முதல் 10.30 வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.
மற்ற வேளையில் உணவு வழங்கப்படும். இந்த அன்னதான திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 பக்தர்கள் பசியாறுகின்றனர். இதனை தொடர்ந்து மற்ற கோவில்களிலும் ஒரிரு நாட்களில் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.
மேற்கண்ட தகவல் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X