search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்சரிக்கை அலாரம்.
    X
    எச்சரிக்கை அலாரம்.

    திருப்பூர் வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

    கொள்ளை சம்பவம் ஏதும் நடந்திருக்குமோ? என்று எண்ணி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கோர்ட்டு சாலையில் இந்தியன் வங்கி உள்ளது. இன்று காலை திடீரென வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. சுமார் ஒரு மணி நேரம் வரை அலாரம் ஒலித்து கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கொள்ளை சம்பவம் ஏதும் நடந்திருக்குமோ? என்று எண்ணினர். 

    மேலும் இதுகுறித்து வங்கி மேலாளர் மற்றும் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். 

    அப்போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக வங்கியில் உள்ள எச்சரிக்கை அலாரம் ஒலித்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   
    Next Story
    ×