என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே மின் ஊழியர் மனைவியிடம் 9 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்4 Oct 2021 11:14 AM GMT (Updated: 4 Oct 2021 11:14 AM GMT)
மதுரை அருகே மின் ஊழியர் மனைவியிடம் 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அருகே உள்ள பரவை மீனாட்சி மில் காலனியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவசக்தி (வயது 39).
இவர் நேற்று மாலை மகள் காவியாஸ்ரீயுடன் மொபட்டில் வெளியே புறப்பட்டு சென்றார்.
மதுரை- சமயநல்லூர் மெயின் ரோட்டில் வந்தபோது 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தனர்.
அங்குள்ள திருமண மண்டபம் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே அவர் கொள்ளையர்களிடம் இருந்து தங்கச்சங்கிலியை காப்பாற்றிக்கொள்ள போராடினார். ஆனாலும் முடியவில்லை.
மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள், சிவசக்தியை கீழே தள்ளி விட்டு, 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
இது தொடர்பாக சிவசக்தி சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குப்பதிவு செய்து, அங்கு உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள பரவை மீனாட்சி மில் காலனியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவசக்தி (வயது 39).
இவர் நேற்று மாலை மகள் காவியாஸ்ரீயுடன் மொபட்டில் வெளியே புறப்பட்டு சென்றார்.
மதுரை- சமயநல்லூர் மெயின் ரோட்டில் வந்தபோது 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தனர்.
அங்குள்ள திருமண மண்டபம் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே அவர் கொள்ளையர்களிடம் இருந்து தங்கச்சங்கிலியை காப்பாற்றிக்கொள்ள போராடினார். ஆனாலும் முடியவில்லை.
மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள், சிவசக்தியை கீழே தள்ளி விட்டு, 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
இது தொடர்பாக சிவசக்தி சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குப்பதிவு செய்து, அங்கு உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X