என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குண்டடம் அருகே டிரான்ஸ்பார்மரில் ஆயில் திருட்டு - மின்தடையால் தவித்த பொதுமக்கள்
Byமாலை மலர்4 Oct 2021 9:09 AM GMT (Updated: 4 Oct 2021 9:09 AM GMT)
பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் குண்டடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
குண்டடம்:
தாராபுரம் வட்டம் குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை அருகே (எஸ்.எஸ்.1) டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்தநிலையில் மர்ம நபர்கள் அதனை அணைத்து வைத்ததுடன், அதில் இருந்த 200 லிட்டர் ஆயிலை திருடிவிட்டு பின்னர் டிரான்ஸ்பார்மரில் சார்ஜ் செய்துவிட்டு சென்றுள்ளனர்.
இதனிடையை ஆயில் இல்லாமல் சார்ஜ் செய்யப்பட்டதால் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதுடன், அப்பகுதியில் மின்தடையும் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் குண்டடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் டிரான்ஸ்பார்மரை மின் ஊழியர்கள் சீரமைத்தனர். ஆயில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X