search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நல்லம்பள்ளி அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 5 பேர் கைது

    நல்லம்பள்ளி அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    தொப்பூர் போலீசார் ரோந்து சென்றபோது கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது48), ஜருகு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (52) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோன்று அதியமான்கோட்டை போலீசார் சென்னியன்கொட்டாய், நார்த்தம்பட்டி, தேங்காய்மரத்துபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற வேடியம்மாள் (60), வசந்தா (50), கிருஷ்ணன் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×