search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக உயர்வு

    மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை 10 ஆயிரத்து 440 கன அடி தண்ணீர் வந்தது. இன்று இது மேலும் அதிகரித்து 14 ஆயிரத்து 192 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கால்வாயில் தண்ணீர் திறப்பு நேற்று முன்தினம் 800 கன அடியில் இருந்தது.

    இது நேற்று 600 கன அடியாக குறைக்கப்பட்டது. இது மேலும் குறைக்கப்பட்டு இன்று 350 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டு உள்ளது. கால்வாய் பாசன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 72.86 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 73.86 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    Next Story
    ×