search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெல்லம்
    X
    வெல்லம்

    பிலிக்கல்பாளையத்தில் வெல்லம் விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

    வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வெல்ல வியாபாரிகள் தெரிவித்தனர்.
    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

    பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி பிலக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச்சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் கலந்து கொண்டு வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது.

    இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 700 உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரத்து 800 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,150 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,120 வரையிலும் ஏலம் போனது.

    வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வெல்ல வியாபாரிகள் தெரிவித்தனர். வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×