என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிலிக்கல்பாளையத்தில் வெல்லம் விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை
Byமாலை மலர்1 Oct 2021 3:53 AM GMT (Updated: 1 Oct 2021 3:53 AM GMT)
வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வெல்ல வியாபாரிகள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர்:
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.
பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி பிலக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச்சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் கலந்து கொண்டு வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 700 உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரத்து 800 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,150 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,120 வரையிலும் ஏலம் போனது.
வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வெல்ல வியாபாரிகள் தெரிவித்தனர். வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.
பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி பிலக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச்சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் கலந்து கொண்டு வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 700 உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரத்து 800 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,150 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,120 வரையிலும் ஏலம் போனது.
வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வெல்ல வியாபாரிகள் தெரிவித்தனர். வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X