என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை அருகே அரசு பஸ் மீது வேன் மோதல்-பனியன் தொழிலாளர்கள் 22 பேர் காயம்
Byமாலை மலர்30 Sep 2021 12:08 PM GMT (Updated: 30 Sep 2021 12:11 PM GMT)
உடுமலையில் இருந்து பெல்லம்பட்டிக்கு சென்ற அரசு பஸ் பூளவாடி அருகே மேட்டு சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பூளவாடி பகுதியில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது. இங்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் மினிவேன் பனியன் கம்பெனிக்கு சென்றது. கோட்டமங்கலம் ஊராட்சி வழியாக வேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது உடுமலையில் இருந்து பெல்லம்பட்டிக்கு சென்ற அரசு பஸ் பூளவாடி அருகே மேட்டு சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது.இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்புறம் மினிவேன் பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த தொழிலாளர்கள் 22 பேர் காயமடைந்தனர். பஸ்சில் பயணம் செய்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
3பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X