search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவிநாசி அரசு கல்லூரியில் நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு

    அரசு அறிவித்ததன்படி நடப்பாண்டில் 25 சதவீத இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
    அவிநாசி:

    அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு  நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை ) நடைபெறுகிறது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தாரணி தெரிவித்துள்ளதாவது:

    அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு  நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கல்லூரியில் இளநிலை பிரிவின் கீழ் 7 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

    மொத்தமுள்ள 409 இடங்களில் பெரும்பான்மையான இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது.

    அரசு அறிவித்ததன்படி நடப்பாண்டில் 25 சதவீத இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களில் ஏற்கனவே கல்லூரிகளில் சேர்ந்த பல மாணவர்களுக்கு இடமாறுதல் வாய்ப்பு கல்லூரியின் சேர்க்கைக் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும், மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 1-ந்தேதி நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பித்த மாணவர்கள் மட்டுமின்றி இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடியாக பங்கேற்கலாம். 

    மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறைப்படி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×