search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

    நாளை (30-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டி.பி. ரோடு, பெரியார் பீடர்களிலும், அனுப்பானடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அழகாபுரி பீடரிலும் மழைக் கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (30-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும்.

    ரெயில்வே காலனி முழுவதும், சர்வோதயா அனைத்து தெருக்கள், அன்சாரி நகர் அனைத்து தெருக்கள், வைத்திய நாதபுரம் முழுவதும், டி.பி. ரோடு முழுவதும், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி. ரோடு முழுவதும்.

    ஆர்.எம்.எஸ். ரோடு, மேலவெளி வீதி, ரெயில்வே ஜங்சன் ஏரியா, டவுன்ஹால் ரோடு, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, மேல மாசி வீதி, காக்கா தோப்பு.

    பழனி ஆறுமுகா நகர், சிந்தாமணி முழுவதும், கண்ணன் காலனி, வினோபாஜி நகர், மாம்பழம் ஏரியா, அனுப்பானடி-சிந்தாமணி குறுக்கு ரோடு, ராஜமான் நகர் மெயின் ரோடு பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று மதுரை தெற்கு செயற் பொறியாளர் மோகன் தெரிவித்தார்.

    அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் உள்ள உயர் அழுத்த மின பாதையில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் நாளை (30-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பாக்குடி, டி-மார்ட் அருகில், கே.போர் ஓட்டல், வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், தபால் துறை பயிற்சி கல்லூரி, காவலர் குடியிருப்பு, சின்னஉடப்பு, விமான நிலைய குடியிருப்பு ஆகிய பகுதிகளில மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மதுரை அரசரடி மேற்கு செயற் பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்தார்.

    Next Story
    ×