என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சை அருகே ஆற்றுக்கரையில் நின்ற பெண்ணிடம் 5½ பவுன் செயின் பறிப்பு
வல்லம்:
தஞ்சை கூட்டுறவு காலனி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவரின் மனைவி கிரிஜா ராணி (வயது 57). இவர் நேற்று முன்தினம் அவருடைய மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் தஞ்சை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை கல்லணை கால்வாய் ஆற்றுப் பகுதியில் காரில் வந்துள்ளார். பின்னர் கிராஜா ராணியின் மகன் துர்கானந்த் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.
அவருடைய மருமகள் கைகுழந்தையை வைத்துக் கொண்டு ஆற்றங்கரையில் நின்றிருந்தார். சற்று தொலைவில் கிரிஜா ராணியும் நின்றாருந்தார்.அப்போது ஆற்றுக்கரை வழியாக ஒருவர் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். திடிரென மோட்டார் சைக்கிளை கிரிஜா ராணியின் அருகே நிறுத்தி மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருந்தவாறே கிரிஜா ராணி கழுத்தில் அணிந்திருந்த 5 ½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு வேகமாக தப்பிச் சென்றுவிட்டார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத கிரிஜா ராணி கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது மர்ம நமர் தப்பி விட்டார். இது குறித்த கிரிஜா ராணி வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா உத்தரவின் பேரில் வல்லம் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 ½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்