search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆடு திருடிய வாலிபர் கைது

    இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வெள்ளாட்டை திருடிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள காலியிடத்தில் வெள்ளாடு ஒன்றை கட்டியிருந்தார்.இந்தநிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வெள்ளாட்டை திருடிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுப்பிரமணியன் ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தார்.
    போலீசார் விசாரணை நடத்தி ஆட்டை திருடிச்சென்ற தாராபுரம், அய்யம்பாளையம் பகுதியைசேர்ந்த ரஞ்சித்குமார்-(வயது 30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
    Next Story
    ×