search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற பெண் உள்பட 6 பேர் கைது

    திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற பெண் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகரில் பல இடங்களில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் மாநகர பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் பாலக்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள பொது சுகாதார வளாகம் அருகே பெண் உள்பட 3 பேர் கஞ்சாவிற்றுக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த வர்கீஸ்ராஜின் மனைவி மதலை மேகலாள மேரி (வயது 39), பாண்டித்துரை (23), அன்பழகன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுபோல் அரியமங்கலம் காமராஜ் நகர், பொன்மலை, எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகரை சேர்ந்த முத்துராமன் (45), அரியமங்கலத்தை சேர்ந்த பிரபாகரன் (30), நாகேந்திரன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×