search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை - விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

    ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
    திருப்பூர்;

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டரின் அனுமதி பெற்று நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதன் மூலமாக நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல்லை விற்பனை செய்ய ஏற்கனவே இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.

    இந்த இணையதளத்தில் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc-edpc.in, www.tncsc.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யலாம்.

    அப்போது கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இணைய வழியின் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்படும்.

    ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். 

    இதன் மூலமாக நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து கொள்ளலாம். ஆகவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×