என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்28 Sep 2021 3:24 PM GMT (Updated: 28 Sep 2021 3:24 PM GMT)
பள்ளிப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி பேட்டை காலனியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 70). இவர் நேற்று காலை பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மிக வேகமாக அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதி நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் முனுசாமி இடது கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பொம்மராஜூப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (25) என்பவரும் காயமடைந்தார்.
இதையடுத்து, இவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, பள்ளிப்பட்டு அருகே கோனேட்டம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முனுசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு அவரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்த பின்னர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த முனுசாமிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X