என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா உறுதி செய்யப்பட்டதால் விவசாயி தற்கொலை
Byமாலை மலர்28 Sep 2021 11:30 AM GMT (Updated: 28 Sep 2021 11:30 AM GMT)
கோவை அருகே கொரோனா உறுதி செய்யப்பட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை அருகே உள்ள செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 70) விவசாயி. கடந்த சில நாட்களாக இவருக்கு சளியுடன் காய்ச்சல் பாதிப்பு இருந்தது.
இதனையடுத்து நாச்சிமுத்து அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாச்சிமுத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாச்சிமுத்துவை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை அருகே உள்ள செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 70) விவசாயி. கடந்த சில நாட்களாக இவருக்கு சளியுடன் காய்ச்சல் பாதிப்பு இருந்தது.
இதனையடுத்து நாச்சிமுத்து அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாச்சிமுத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாச்சிமுத்துவை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X