என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகன்களை படிக்க வைக்க விஷம் குடித்து மிரட்டிய இளம்பெண் பலி
Byமாலை மலர்28 Sep 2021 10:31 AM GMT (Updated: 28 Sep 2021 10:31 AM GMT)
மகன்களை ஒழுங்காகப் படிக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என சோபியா மேரி மிரட்டி உள்ளார்.
பல்லடம்:
திண்டுக்கல்லை சேர்ந்தவர் கிறிஸ்தவராஜ்(வயது 37), இவரது மனைவி சோபியா மேரி (29). இவர்களுக்கு 9, மற்றும் 11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மகன்கள் படிப்பதில் போதிய கவனம் செலுத்துவதில்லை என பெற்றோர்கள் இருவரும் வருத்தம் அடைந்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மகன்களை ஒழுங்காகப் படிக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என சோபியா மேரி கூறிவிட்டு அருகில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பிறகு அதனை துப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெளியே சென்ற கிறிஸ்தவ ராஜ், வீட்டிற்கு திரும்பிய போது, சோர்வாக இருந்த மனைவியிடம், ஏன் இப்படி சோர்வாக இருக்கிறாய் எனக் கேட்ட போது,பசங்களை மிரட்டுவதற்காக பூச்சிமருந்து குடித்தேன், பிறகு துப்பி விட்டேன். ஆனால் மயக்கமாக வருகிறது எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதல் உதவி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் அவரது உடல்நிலை மோசம் அடையவே சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சோபியா மேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் கிறிஸ்தவராஜ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X