என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் - தொழிலாளியை கொன்ற தாய், மகன் கைது
Byமாலை மலர்28 Sep 2021 9:46 AM GMT (Updated: 28 Sep 2021 10:05 AM GMT)
சிறிது நேரத்திற்கு பிறகு ராயப்பனின் தங்கை அங்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. ஆனால் வீட்டினுள் ராயப்பன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பழங்கரை இந்திரா காலனியை சேர்ந்தவர் ராயன் என்கிற ராயப்பன் (வயது 46). கூலி தொழிலாளி. இவரது மனைவி முருகாத்தாள் (45). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கூலி வேலைக்கு செல்லும் ராயப்பன் தினமும் வீட்டிற்கு வரும் போது மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராயப்பன் வேலை முடிந்ததும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
சிறிது நேரத்திற்கு பிறகு ராயப்பனின் தங்கை அங்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. ஆனால் வீட்டினுள் ராயப்பன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரது உடல் அருகே துண்டு ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராயப்பனின் தங்கை அவினாசி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் ராயப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் போதையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு ராயப்பன் தனது மனைவி மற்றும் 17 வயது மகனுடன் தகராறு செய்து அவர்களை தாக்கினார். கோபமடைந்த அவரின் மகன் கல்லால் தந்தையை தாக்கினார். ரத்தம் வடிய ராயப்பன் மீண்டும் தகராறு செய்தார்.
ஆத்திரமடைந்த தாயும், மகனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக முருகாத்தாள் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X