என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாநகரில் குடிநீர் குழாய் உடைப்பால் வீணாக வெளியேறும் தண்ணீர்
Byமாலை மலர்28 Sep 2021 9:23 AM GMT (Updated: 28 Sep 2021 10:18 AM GMT)
திருப்பூர் கொங்குரோடு இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் 5 அடி வரை பீறிட்டு வெளியேறியது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சாலை மற்றும் சில பணிகளுக்காக குழிகள் தோண்டப்படும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக மாநகர் பகுதியில் குடிநீர் சப்ளையில் பல மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் கொங்குரோடு இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் 5 அடி வரை பீறிட்டு வெளியேறியது. இதனால் அப்பகுதியில் ஆறுபோல் தண்ணீர் வீணாக வெளியேறியது. மேலும் அங்கு குளம்போல் தண்ணீர் தேங்கியது.
மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இப்படி தண்ணீர் வீணாக வெளியேறியது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X