என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
Byமாலை மலர்28 Sep 2021 8:58 AM GMT (Updated: 28 Sep 2021 8:58 AM GMT)
பல்லடத்தில் இருந்து கொசவம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக நாராயணசாமி ஆட்டோவை ஓட்டி சென்றார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 54). இவர் பல்லடம் பஸ் நிலையம் அருகே சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் இருந்து கொசவம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவை ஓட்டி சென்றார்.
கொசவம்பாளையம் அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஓரம் இருந்த பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நாராயணசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி பேபி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X