search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பல்லடத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

    பல்லடத்தில் இருந்து கொசவம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக நாராயணசாமி ஆட்டோவை ஓட்டி சென்றார்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 54). இவர் பல்லடம் பஸ் நிலையம் அருகே சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி  வந்தார். இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் இருந்து கொசவம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவை ஓட்டி சென்றார். 

    கொசவம்பாளையம் அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஓரம் இருந்த பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நாராயணசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இதுகுறித்து அவரது மனைவி பேபி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    Next Story
    ×