search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
    X
    மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

    கணபதிபாளையம் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

    பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் 59 வயது ஆசிரியைக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்ற அவருக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று  உறுதியானது.  

    இதையடுத்து பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. மேலும் பள்ளிக்கு வந்த 550 மாணவ மாணவிகள் மற்றும் 40 ஆசிரியர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. 
    Next Story
    ×