என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை பகுதியில் மின்வெட்டால் மக்கள் கடும் அவதி
Byமாலை மலர்27 Sep 2021 12:07 PM GMT (Updated: 27 Sep 2021 12:07 PM GMT)
சம்பவத்தன்று மாலை மின்சாரம் தடைபட்டு இரவு வெகுநேரம் வரை மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
உடுமலை:
உடுமலை சிங்கப்பூர் நகர், ஜானி பேகம்காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் கட்டிடம் மற்றும் துப்புரவு தொழில் செய்யும் தொழிலாளர்களாகவே உள்ளனர்.
இப்பகுதியில் சமீப காலமாக தொடர் மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சம்பவத்தன்று மாலை மின்சாரம் தடைபட்டு இரவு வெகுநேரம் வரை மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால் பெண்கள் வீட்டு வேலைகளை மேற்கொள்ள முடியாமலும் மாணவர்கள் படிக்க முடியாமலும் அவதிக்குள்ளாயினர். மேலும் இந்த பகுதியில் உள்ள தளி சாலை மேம்பாலம் இருளில் மூழ்கியதால் சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டது.
வவ்வால் மின் மாற்றியில் மோதியதால் ஏற்பட்ட மின் தடை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற மின்தடை ஏற்படாமல் பராமரிக்கவேண்டும் வேண்டியது அவசியம் என்பது அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X