என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது - கே.எஸ்.அழகிரி
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் பாதிக்கப்பட்ட மீனவர்களோடு தொலைபேசியில் பேசினேன் அவர்கள் மருத்துவமனையில் இருந்தார்கள். அவர்கள் சொன்னது என்னவென்று சொன்னால் கடற்கொள்ளையர்கள் வந்து தாக்கியதாக கூறினார்கள்.
இலங்கை அரசாங்கத்தின் உடைய பின்னணியில் கடற்கொள்ளையர்கள் இப்படி நடந்து கொண்டார்களா என்று கேட்டேன். அவர்கள் சொன்னார்கள் ராணுவம் தான் வேறு உடையில் வந்து எங்களை தாக்கி இருக்கிறார்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னால் சில உரிமைகளை நாம் பெற்றுத் தரவேண்டியது அவசியம். அந்த வகையில் மத்திய அரசாங்கம் தமிழக மீனவர்களுக்கு அவர்கள் உரிமையை பெற்று தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அசாமில் புகைப்பட கலைஞர் ஒருவர் வன்முறையில் தாக்கப்பட்டு கீழே விழுந்தது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இது காட்டுமிராண்டித்தனமான செயல் செய்தியாளர்கள் என்பவர்கள் செய்திகளை வெளியே கொண்டு வருகிறவர்கள். அந்த முயற்சிக்கு அங்கு அவர்கள் கொடுக்கின்ற செய்தி நமக்கு எதிர்மறையாக இருந்தால் நாம் அதற்கு பதிலளிக்க வேண்டும்.
அதற்காக தாக்குவது ரத்தம் சிந்துவது என்பது தவறான விஷயம். அந்த காட்டு மிராண்டித்தனமான செயலை தமிழக காங்கிரஸ் கண்டிக்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...பெங்களூருவில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்