search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராசிபுரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    ராசிபுரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டியை அடுத்த பாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 65). கூலித்தொழிலாளி. கால் வலி உள்ளிட்ட நோயால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. எனவே கடந்த 23-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த ராமன் விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமன் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மகன் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×