search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    மதுரையில் ஸ்டூடியோவை உடைத்து கேமிரா, கம்ப்யூட்டர் திருட்டு

    மதுரையில் ஸ்டூடியோவை உடைத்து கேமிரா, கம்ப்யூட்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாடக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சங்கர். இவர் பழங்கா நத்தம் நேரு நகரில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவர் கடையை மூடி விட்டு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தார் அப்போது கடையின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது கேமிரா மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் திருடு போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் மாதிரிகளை பதிவு செய்தனர். இந்த திருட்டு குறித்து இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×