என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே பனியன் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்26 Sep 2021 8:53 AM GMT (Updated: 26 Sep 2021 8:53 AM GMT)
சக்திவேல் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது58). இவரது மனைவி பானுமதி(55). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சக்திவேல் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சக்திவேல் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியே சென்றபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X