search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

    காயமடைந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம், பக்கம் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் கிராமம் கிணத்துதோட்டம் பகுதியை சேர்ந்த அமராவதி என்பவரது மனைவி மணிமேகலை(வயது65). இவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு  வீடு திரும்பினர்.

    பல்லடம் கோவை-திருச்சி மெயின் ரோட்டில் பச்சாபாளையம்  மரப்பாலம் என்ற இடத்தில் செல்லும் போது  கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மணிமேகலை  மீது அரசு பஸ்சின் பின் சக்கரம் ஏறியதாக கூறப்படுகிறது.

    காயமடைந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம், பக்கம் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிமேகலையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    காயங்களுடன் இருந்த அமராவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் கண் முன்னே மூதாட்டி பலியான சம்பவம் மலையம்பாளையம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×