search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை வழியாக இயக்கப்படும் ரெயில்கள் நேரம் மாற்றம்

    பழனி ரெயில் நிலையத்தை மாலை 6 மணிக்கு அடைந்து 6:05க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     உடுமலை:

    பொள்ளாச்சி வழியாக சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரெயில் நேரத்தில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் அக்டோபர் 1-ந்தேதி முதல் பாலக்காடு சந்திப்பில் இருந்து மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4:52 மணிக்கு பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை சென்றடையும்.   

    அதன்பின் மாலை 4:55 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு உடுமலை ரெயில் நிலையத்தை மாலை, 5:23 மணிக்கு அடைந்து  5:25க்கு புறப்படும். பழனி ரெயில் நிலையத்தை மாலை 6 மணிக்கு அடைந்து 6:05க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×