search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நிலக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

    நிலக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நிலக்கோட்டை சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த இப்ராகிம் (வயது 70), பள்ளப்பட்டியை சேர்ந்த கண்ணன் (51) ஆகிய 2 பேரும், நிலக்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×