search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு. மண்டல துணைப் பொதுச் செயலாளர் வி. விசுவநாதன் பேசினார்.
    உடுமலை:

    மத்திய அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் குறித்த விளக்க ஆர்ப்பாட்டம் உடுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உடுமலை கிளை அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கிளை செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு. மண்டல துணைப் பொதுச் செயலாளர் வி. விசுவநாதன் பேசினார். 

    ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப்., கிளைத் தலைவர் ராஜா, சி.ஐ.டி.யு.கிளை தலைவர் ஆர்.பாபு, செயலாளர் கார்த்திகேயன், ஐ.என்.டி.யூ.சி. கிளை தலைவர் சிவகுமார் ,எம்.எல்.எப்., தொழிற்சங்கம் சார்பில் சரவணன், எல்.எல்.எப்., தொழிற்சங்கம் சார்பில் இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×