என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழில் துறையினர் கோரிக்கைகளை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு
Byமாலை மலர்25 Sep 2021 12:14 PM GMT (Updated: 25 Sep 2021 12:14 PM GMT)
முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மத்திய வர்த்தகம், தொழில் துறை, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் சார்பில் ஏற்றுமதியாளர்கள் கண்காட்சி திருப்பூர் அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நடைபெற்றது.
இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
இந்தியாவில் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று குறையாமல் உள்ளது. ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இன்னும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளித் தொழிலின் வளர்ச்சி காரணமாக உலக வர்த்தகத்தில் கொங்கு மண்டலம் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
தொழில் துறையினர் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கிறது. அதன்படி பஞ்சுக்கு ஒரு சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.இக்கொள்கை தொழில் வளர்ச்சிக்கு உதவுவதுடன், அந்நியச் செலாவணியையும் அதிகமாக ஈட்டிக்கொடுக்கும் என்றார்.
இக்கண்காட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், பின்னலாடை உற்பத்தி, கயிறு உற்பத்தி உள்ளிட்டவை தொடர்பாக 37 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதன் தொடக்க விழாவில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், செல்வராஜ் எம்.எல்.ஏ.,, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் பொது இணை இயக்குநர் டி.ஸ்ரீதர், ஏ.இ.பி.சி., தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர்ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், கனரா வங்கியின் முதன்மை பொது மேலாளர் பழனிசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X