என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கருப்பன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் ராஜா (வயது 27). இவர் உறந்தைராயன் குடிக்காடு பிரிவு தமிழ்நாடு மின்சார அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று காலை புதூர் பகுதியில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை ராஜா சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராஜாவின் தந்தை பாஸ்கர் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த ராஜாவுக்கு கடந்த 10 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. தற்போது அவரது மனைவி பாண்டிச்செல்வி 9 மாத, கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது என்பது குறிப்பிடதக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்