search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே கார் மோதி முதியவர் பலி

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது70). இவர் சனவெளியில் வீட்டுக்கு பொருட்கள் வாங்கிவிட்டு மொபட்டில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வந்தபோது திருவாடானையில் இருந்து வந்த முதுகுளத்தூர் தாலுகா மைக்கேல்பட்டினத்தைச் சேர்ந்த சாபியோ (27) என்பவர் ஓட்டி வந்த கார் நடராஜன் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

    இதுகுறித்து முதியவரின் மகன் பழனிகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து டிரைவர் சாபியோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×