என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கார் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்25 Sep 2021 10:21 AM GMT (Updated: 25 Sep 2021 10:21 AM GMT)
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்:
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது70). இவர் சனவெளியில் வீட்டுக்கு பொருட்கள் வாங்கிவிட்டு மொபட்டில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வந்தபோது திருவாடானையில் இருந்து வந்த முதுகுளத்தூர் தாலுகா மைக்கேல்பட்டினத்தைச் சேர்ந்த சாபியோ (27) என்பவர் ஓட்டி வந்த கார் நடராஜன் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதுகுறித்து முதியவரின் மகன் பழனிகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து டிரைவர் சாபியோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X