என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல்- விழுப்புரம் மாவட்டத்தில் 150 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
Byமாலை மலர்25 Sep 2021 9:34 AM GMT (Updated: 25 Sep 2021 9:34 AM GMT)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட 24 ஆயிரம் பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
விழுப்புரம்:
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடந்த 15-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
இதில் 28 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 241 வேட்பு மனுக்களில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 239 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் 293 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 2090 வேட்பு மனுக்களில் 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 2061 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
688 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 4138 வேட்பு மனுக்களில் 39 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4099 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 17,531 வேட்பு மனுக்களில் 80 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 17,451 வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட 24 ஆயிரம் பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 150 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 23,850 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடந்த 15-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
இதில் 28 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 241 வேட்பு மனுக்களில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 239 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் 293 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 2090 வேட்பு மனுக்களில் 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 2061 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
688 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 4138 வேட்பு மனுக்களில் 39 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4099 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 17,531 வேட்பு மனுக்களில் 80 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 17,451 வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட 24 ஆயிரம் பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 150 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 23,850 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X