என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
9-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த வாலிபர் போக்சோவில் கைது
Byமாலை மலர்25 Sep 2021 4:19 AM GMT (Updated: 25 Sep 2021 4:19 AM GMT)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 9-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுமி.
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவி திருச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வந்தார்.
அப்போது மாணவிக்கு தூரத்து உறவினரான திருச்சியை சேர்ந்த கோபாலநாத் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தால் நாளடைவில் இது காதலாக மாறியது. மாணவியின் பாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற கோபாலநாத் அவரிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பலமுறை கற்பழித்தாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து மாணவி மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். இதனையடுத்து மாணவி தனது காதலருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.
சம்பவத்தன்று கோபாலநாத் சிறுமியை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். பின்னர் பள்ளி முடிந்து பஸ் நிலையத்திற்கு வந்த மாணவியை, கோபால்நாத் ஒதுக்குபுறமான பகுதிக்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனை அப்போது அங்கு நின்றிருந்த மாணவியின் தந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கோபால்நாத்தை கையும், களவுமாக பிடித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் 9-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த கோபாலநாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுமி.
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவி திருச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வந்தார்.
அப்போது மாணவிக்கு தூரத்து உறவினரான திருச்சியை சேர்ந்த கோபாலநாத் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தால் நாளடைவில் இது காதலாக மாறியது. மாணவியின் பாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற கோபாலநாத் அவரிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பலமுறை கற்பழித்தாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து மாணவி மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். இதனையடுத்து மாணவி தனது காதலருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.
சம்பவத்தன்று கோபாலநாத் சிறுமியை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். பின்னர் பள்ளி முடிந்து பஸ் நிலையத்திற்கு வந்த மாணவியை, கோபால்நாத் ஒதுக்குபுறமான பகுதிக்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனை அப்போது அங்கு நின்றிருந்த மாணவியின் தந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கோபால்நாத்தை கையும், களவுமாக பிடித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் 9-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த கோபாலநாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X