search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    9-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த வாலிபர் போக்சோவில் கைது

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 9-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுமி.

    இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவி திருச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வந்தார்.

    அப்போது மாணவிக்கு தூரத்து உறவினரான திருச்சியை சேர்ந்த கோபாலநாத் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தால் நாளடைவில் இது காதலாக மாறியது. மாணவியின் பாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற கோபாலநாத் அவரிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பலமுறை கற்பழித்தாக கூறப்படுகிறது.

    கொரோனா பரவல் குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து மாணவி மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். இதனையடுத்து மாணவி தனது காதலருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.

    சம்பவத்தன்று கோபாலநாத் சிறுமியை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். பின்னர் பள்ளி முடிந்து பஸ் நிலையத்திற்கு வந்த மாணவியை, கோபால்நாத் ஒதுக்குபுறமான பகுதிக்கு அழைத்து சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

    இதனை அப்போது அங்கு நின்றிருந்த மாணவியின் தந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக கோபால்நாத்தை கையும், களவுமாக பிடித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் 9-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த கோபாலநாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×