என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது
Byமாலை மலர்24 Sep 2021 1:09 PM GMT (Updated: 24 Sep 2021 1:09 PM GMT)
ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில், திருத்தணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று முன்தினம் காலை ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த ஒரு பஸ்சில் இருந்து வந்து இறங்கியவர் மீது சந்தேகம் ஏற்பட்டதும், உடனே போலீசார் அவரை மடக்கி திருத்தணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
அப்போது அவர் கையில் வைத்திருந்த பையில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து இந்த கஞ்சாவை சென்னையில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் அவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 40) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X