என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எருமப்பட்டி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்24 Sep 2021 9:14 AM GMT (Updated: 24 Sep 2021 9:14 AM GMT)
எருமப்பட்டி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி ஊராட்சி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பா (42). இவர் தனது கணவரிடம் ரூ.1,000 சீட்டு கட்ட கேட்டதாக தெரிகிறது. அதற்கு சேகர் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாப்பா கணவருக்கு தெரியாமல் ரூ.1,000-ஐ எடுத்து சீட்டு பணம் கட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் சேகருக்கு தெரியவே அவர் மனைவி பாப்பாவை அடித்து விட்டார். இதற்கிடையே மனைவியை அடித்து விட்டோமே என்று மன உளைச்சலில் இருந்த சேகர், சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாப்பா மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சேகரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X