search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    காரிமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

    காரிமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அடுத்த பட்டகபட்டி பகுதியை சேர்ந்தவர் அரியப்பன். இவருடைய மனைவி முருகம்மாள். இவர்கள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு அருகில் இருந்த விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்று உள்ளனர். மீண்டும் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளி நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×