search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் ரூ.53 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்

    நேற்று 113 விவசாயிகள் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 385 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையன்று தேங்காய் பருப்பு, வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறுகிறது.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    நேற்று 113 விவசாயிகள் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 385 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

    இதில் முத்தூர், மூலனூர், ஈரோடு, வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் 9 பேர் கலந்துகொண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ சூரியகாந்தி விதை ரூ.57. 08 க்கும், குறைந்தபட்சம் ரூ.47.89க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.53 லட்சத்து 85 ஆயிரத்து 574 க்கு வணிகம் நடைபெற்றது.
    Next Story
    ×