search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடைமேம்பாலத்தில்  குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள்.
    X
    நடைமேம்பாலத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள்.

    மாலைமலர் செய்தி எதிரொலி திருப்பூர் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் குவிந்து கிடந்த கழிவுகள் அகற்றம்

    ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சாலைக்கு வரும் பயணிகள் வசதிக்காக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்: 

    திருப்பூர் ரெயில் நிலையம் வழியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் , வெளி மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். 

    இந்தநிலையில் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சாலைக்கு வரும்  பயணிகள் வசதிக்காக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால்  பயணிகள் அதனை பயன்படுத்தாமல் உள்ளனர். இதனால் நடைமேம்பாலம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வந்தது. 

    குடிமகன்கள் மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கு போட்டு விட்டு சென்றனர். மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகள் நடைபாதையில் குவிந்து கிடந்தன. மேலும் வடமாநில தொழிலாளர்கள் இரவு தங்குவதற்கு நடைமேம்பாலத்தை பயன்படுத்தினர். இதனால் நடைமேம்பாலம் குடியிருப்பு போல் மாறியது. 

    எனவே இதனை தடுக்க ரெயில்வே போலீசார் இரவு நேரங்களில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மாலைமலரிலும் செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் குவிந்து கிடந்த குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. 

    மேலும் அங்கு தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். 
    Next Story
    ×