search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்குளி திருப்பூர் சாலையை படத்தில் காணலாம்.
    X
    ஊத்துக்குளி திருப்பூர் சாலையை படத்தில் காணலாம்.

    விபத்துக்களை தடுக்க ஊத்துக்குளி திருப்பூர் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    வாகனங்கள் வேகமாக வருவதால் பொதுமக்கள்,மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் அந்த வழியாக செல்கின்றனர்.
    ஊத்துக்குளி:

    திருப்பூர் ஊத்துக்குளி ரவுண்டானா பகுதியில் இருந்து திருப்பூர் மெயின் சாலைக்கு செல்லும் வழியில் 4ரோடு பிரிவு உள்ளது. இந்த சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , புகழ்பெற்ற கதித்தமலை முருகன் கோவில் உள்ளது. காலை நேரத்தில் இப்பகுதியில் அதிகமான வாகன நெரிசல் காணப்படுகிறது.

    மேலும் மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். வாகனங்கள் வேகமாக வருவதால் பொதுமக்கள்,மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் அந்த வழியாக செல்கின்றனர். விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று காலை காரும் - மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

    எனவே விபத்துக்களை தடுக்க ஊத்துக்குளி ரவுண்டானா - நால் ரோடு சந்திப்பு திருப்பூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
    Next Story
    ×