search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

    மிளகாய் சாகுபடி செய்வதற்கு ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் ஏற்றதாகும்.
    உடுமலை:

    உடுமலை, தளி, அமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் பருவமழை விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. 

    அதை அடிப்படையாகக் கொண்டு தென்னை, வாழை ,சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட நீண்டகால பயிர்களும், தானியங்கள், அன்றாட வருமானம் தரக்கூடிய கீரைவகைகள், காய்கறிகளை விவசாயிகள் சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தளி பகுதியில் தற்போது மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    மிளகாய் சாகுபடி செய்வதற்கு ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் ஏற்றதாகும். நிலையான வருமானம் இருப்பதால் ஒரு சில விவசாயிகள் ஆண்டு முழுவதும் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    சாகுபடி செய்த நாளில் இருந்து 75 முதல் 105 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். அதைத் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்கள் வரையிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மிளகாயை அறுவடை செய்யலாம். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களில் மிளகாய்க்கு தனி இடம் உண்டு. 

    பச்சையாகவும், வத்தலாகவும் பொடியாகவும் என ஆண்டு முழுவதும் அதன் பயன்பாடு உள்ளதால் சீரான விலையும் கிடைக்கிறது. ஆனால் கூலியாட்கள் பற்றாக்குறையால் செடிகள் பராமரிப்பு, உரமிடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்தில் செய்ய முடிவதில்லை. 

    இதனால் செடிகளின் வளர்ச்சியும் விளைச்சலும் குறைந்து விடுகிறது. எனவே விவசாய பணியில் நிலவுகின்ற கூலியாட்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  
    Next Story
    ×