என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடுதலாக சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் - தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
Byமாலை மலர்24 Sep 2021 5:44 AM GMT (Updated: 24 Sep 2021 5:44 AM GMT)
கொரோனா கால சிறப்பு ஊதியம், நிவாரண உதவி, ஒப்பந்த ஊழியருக்கு உரிய சம்பளம் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் லயன்ஸ் கிளப் அரங்கில் விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், அலுவலர்களுடனான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
விழுதுகள் அமைப்பு இயக்குனர் தங்கவேலு தலைமை வகித்து, தூய்மை பணியாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து பேசினார். நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார், தூய்மை பணியாளர்களுடன், சுகாதார வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது தூய்மை பணியாளர் தரப்பில் கூறியதாவது:
மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். கொரோனா கால சிறப்பு ஊதியம், நிவாரண உதவி, ஒப்பந்த ஊழியருக்கு உரிய சம்பளம் உள்ளிட்டவை வழங்க வேண்டும் .
தூய்மை பணியாளர் குடும்ப குழந்தைகள் கல்வி பயிலும் வகையில் விழுதுகள் அமைப்பு செயல்படுத்தும் தற்போதுள்ள 10 வள மையங்களை மேலும் அதிகரிக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் தங்கள் தாய்மொழியை கற்பிக்கும் வகையில் வள மையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X