search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ. பன்னீர் செல்வம்
    X
    ஓ. பன்னீர் செல்வம்

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது: ஓ. பன்னீர் செல்வம்

    கல்லூரி மாணவி தாம்பரம் ரயில் நிலையம் வாயிலில் கத்தியால் பட்டப்பகலில் குத்தி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    அ.தி.மு.க.-வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி இன்று நான் அறிக்கை வெளியிட்ட நிலையில், தாம்பரம் தனியார் கல்லூரி மாணவி சுவேதா இன்று தாம்பரம் ரயில் நிலையம் வாயிலில் கத்தியால் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து ஆற்றொனாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

    இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவதும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இதுபோன்ற கொலைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் பெருத்த அச்சத்தை ஏற்படுத்த்தியுள்ளது.

    இந்தக் கொலைச் சம்பவத்திற்கு காரணமாக குற்றவாளியை உடனடியாக கைது செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத்தர காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சுவேதாவின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×